ரோஜா நிறத்தில் இரத்தத் திட்டுகள் - அத்தியாயம் 5
அத்தியாயம் 5 ஜானகியின் சத்தத்தில் கைகளை உதறி நிமிர்ந்தவன் அவள் முகம் காண்கையில் மீண்டும் மின் இணைப்பு வர அவன் ஒரு வான்கோழியை வெட்டி சமைக்க சுத்தம் செய்துக் கொண்டு இருந்தான். அவளது பயம் படவிய விழிகள் மெல்ல இயல்புக்கு வர அவனை ஏன் மீண்டும் மீண்டும் தவறாக நினைக்கும் படியே சூழ்நிலைகள் அமைகிறது அவள் பெருமூச்சு விட்டு தன் தவறான கற்பனைக்கு மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னாள். “சாரி .. மிஸ்டர்..” ஜானகிக்கு குற்ற உணர்வாக இருந்தது இரு நாட்கள் அவனது வீட்டில் தங்கி அவனால் உயிர் காப்பாற்றப்பட்டு அவனைச் சந்தேகமேப் பட்டு போதாக் குறைக்கு அவன் பெயரைக் கூட அறியாது இருக்கிறோம்.. “ஆதித்ய கரிகாலன் ..” அவன் குரலில் அந்த பெயரைக் கேட்டதும் லேசாக அதிர்ந்தது இதுவரை கேட்டிராத அவன் குரலினாலா அந்த பெயரினாலா இல்லை அந்த இரவின் இரத்தம் தோய்ந்த விரல்கள் தந்த நடுக்கத்தினாலா என்பதை அவள் உணராது குழம்பினாள். “அல்லி ..அல்லி ..இருக்காளா னு..பார்த்து .வான்கோழி வந்து …பயந்து …” சம்மந்தமே இல்லாது பேசும் டைம் அடிக்கும் குரலில் அவள் பேச அவள் பேச்சு அவளுக்கே வேறு ஒரு சமயம் என்றால் சிரிப்பை வரவழைத்திருக்கும். அவன் ஒன்றும் பேசாது